
சினிமா துறையில் சில நாட்களாகவே தற்கொலை, மற்றும் கொலை சம்பவங்கள் அரங்கேறிவருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பிரபல நடிகை மற்றும் நடன கலைஞர் குயிஸ்மட் பெய்க் என்கிற நடிகை , நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தள்ளியது. இதில் ஒருவன் இனி எப்படி நீ ஆடுவாய் என்று பார்க்கிறோம் என்று சொன்னதாக தகவல் கூறப்படுகிறது.
அந்நடிகையின் மீது 12 குண்டுகள் பாய்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை தெரியவந்துள்ளது அந்த காரை ஓட்டி வந்த நபரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அந்த நடிகையின் கொடூர கொலை சம்பவம் அந்நாட்டவர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதே போல சில மாதங்களுக்கு முன்பு ஒரு நடிகை சுட்டு கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.