"காதலும் வேண்டாம் கீதலும் வேண்டாம்" ஆரவை தூக்கி எறிந்த ஓவியா...

 
Published : Sep 04, 2017, 07:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
"காதலும் வேண்டாம் கீதலும் வேண்டாம்" ஆரவை தூக்கி எறிந்த ஓவியா...

சுருக்கம்

oviya quit the aarav love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நடிகை ஓவியாவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். வெள்ளித்திரையில் இவருக்கு கிடைக்காத, ரசிகர்கள் ஒரு மாதத்திற்குள்ளே சின்னத்திரையில் கிடைத்தனர்.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய நேர்மை தான். அதே போல் பிக் பாஸ் வீட்டிற்குள் இவரை பற்றி பலர் தவறாக பேசினாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவர்களை பற்றி யாரிடமும் தவறாக பேசாமல் இருந்த குணம் அனைவரையும் இவருடைய ரசிகர்களாக மாற்றியது.

மேலும் இவர் ஆரவை காதலித்து, மனஉளைச்சலுக்கு ஆளாகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றாலும்  சமூக வலைத்தளத்தில் ஹாட் டாபிக்காக  தற்போது வரை இருந்து வருகிறார் ஓவியா. 

மேலும் இவர் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்த போது, பலரும் ஆரவ் உனக்கு சரியானவன் இல்லை என்று கூறியும், ஆரவை காதலிப்பேன் என தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆனால், தற்போது அவரே டுவிட்டரில் ‘நான் யாரையும் காதலிக்கவில்லை சிங்கிள், சந்தோஷமாக இருக்கின்றேன்’ என கூறியுள்ளார். ஓவியாவிடம் இருந்து இப்படி ஒரு ட்விட்டை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் பலர்... நீங்கள் இப்போது தான் சரியான முடிவை எடுத்திருகிறீர்கள், என தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!