சினேகனுக்கு செம நோஸ் கட் கொடுத்த ஓவியா... என்ன நடந்தது தெரியுமா...

First Published Jul 13, 2017, 6:26 PM IST
Highlights
oviya nose cut snehan


பாடலாசிரியர் சினேகன், நமிதா, காயத்ரி ரகுராம் என எப்போதும் யாரை பழிவாங்கலாம் என யோசித்துக்கொண்டே இருக்கும் கும்பல் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஓவியா... சினேகனிடம் நீங்கள் மூன்றாயிரம் பாடலுக்கு மேல் எழுதியுள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்... நீங்கள் எழுதிய பாடலில் உங்களுக்கு பிடித்த பாடல் எது? என கேட்டார்.

அதற்கு சினேகன், ராம் படத்தில் வரும் ஆராரிராரோ... என்ற பாடலை சொல்கிறார், மேலும் இந்த பாடலை நான் தனிமையில் இருக்கும்போது கேட்டால் தன்னையே மறந்து அழுதுவிடுவேன் என கூறுகிறார்... இதற்கு நமிதாவும்... காயத்ரியும் ஆமாம் அந்த பாடலை கேட்டால் தங்களுக்கும் அழுகை வரும் என கூறியதற்கு, ஓவியா என்னுடைய அம்மா சில நாட்களுக்கு முன் கேன்சரால் இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு பல முறை நான் இந்த பாடலை கேட்டிருக்கிறேன் எனக்கு அழுகை வரவில்லை என கூறி செம நோஸ் கட் கொடுத்தார். 

click me!