பணத்திற்காகவும், புகழுக்காகவும் சண்டையிடுவதை நிறுத்துங்கள்…! ஓவியாவின் அறிவுரை யாருக்கு தெரியுமா?

First Published Jun 19, 2018, 7:08 PM IST
Highlights
oviya asks to stop fighting for money and fame


சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன், கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமடைந்த ஓவியாவும், பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஒருமுறை சிறப்பு விருந்தினராக சென்று வந்தார்.

அதன் பிறகு தற்போது ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் ”பணமும் புகழும் நாம் எதிர்பார்த்தபடி அதிக மகிழ்ச்சியை தராது. நமது மகிழ்ச்சியை தீர்மானிப்பது நமது மனம் தான். மனதிருப்தியும், சுய மதிப்பீடும் தான் கடைசியில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தருகிறது. பணத்துக்காகவும் புகழுக்காகவும் சண்டையிடுவதை நிறுத்தி விட்டு, அன்பை பரப்புங்கள் அனைவரையும் நேசியுங்கள்” என தனது பதிவில் கூறி இருக்கிறார் ஓவியா.

திடீரென இந்த பதிவை அவர் வெளியிட காரணம் என்ன? ஒரு வேளை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற அவருக்கு, முன்பு நடந்த கசப்பான அனுபவங்கள் தந்த பாடத்தை தான், அவர் இவ்வாறு கூறுகிறார் போல.

I realised Money and fame can't bring much happiness!at the end it's self satisfaction and self validation.ppl should stop fighting for it!!spread LOVE 💗

— Oviyaa (@OviyaaSweetz)

பிக் பாஸ் மூலம் பெயரும் புகழும் அடைந்து அதன் மூலம் தற்போது, அதிக பணமும் சம்பாதிக்கும் இவர், இப்படி அறிவுரை சொல்வது யாருக்கு? என யோசித்து பார்க்கும் போது, பிக் பாஸில் தற்போது கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் தான் நினைவிற்கு வருகின்றனர்.

பிக் பாஸ் பற்றி அறிந்து தெரிந்து அவர்கள் இங்கு வர காரணம் பணமும், புகழுமாக தானே இருக்க முடியும். அதனால் தான் ஓவியா இப்படி கூறி இருக்கிறார் போல.

click me!