ரஜினி, கமல் படத்தை ரெண்டாவது தடவை கூட ஒரு பய பார்க்கமாட்டான;வெளுத்தெடுத்த சினிமாப்புள்ளி!

Published : Oct 08, 2019, 06:49 PM ISTUpdated : Oct 09, 2019, 10:44 AM IST
ரஜினி, கமல் படத்தை ரெண்டாவது தடவை கூட ஒரு பய பார்க்கமாட்டான;வெளுத்தெடுத்த சினிமாப்புள்ளி!

சுருக்கம்

ரஜினி, கமல், விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களை தாறுமாறாக தாளித்து எடுத்திருக்கிறார் மனிதர். தயாரிப்பாளர்களின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது எனும் தொனியில் இவர் பேசியிருக்கும் வார்த்தைகள் சூப்பர் ஹீரோக்களை கண்டபடி சூடேற்ற் இருக்கின்றன. 

இந்த தேசத்தினை காக்க வந்த தேவர்கள் போல் சினிமா ஹீரோக்களை தூக்கி வைத்து கொண்டாடுவதுதான் கடந்த இரண்டு, மூன்று தலைமுறைகளாக ரசிகர்கள் செய்யும் நாசம். ஆனால் அதே சினிமா துறையில் இருந்து கொண்டு, மாஸ் ஹீரோக்களின் இமேஜ் மீது மண் அள்ளிப் போடும் செயல்களையும் சில முக்கியஸ்தர்கள் செய்ய தவறுவதில்லை. அவர்களில் ஒருவர்தான் தயாரிப்பாளர் கே.ராஜன். 

ரஜினி, கமல், விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களை தாறுமாறாக தாளித்து எடுத்திருக்கிறார் மனிதர். தயாரிப்பாளர்களின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது எனும் தொனியில் இவர் பேசியிருக்கும் வார்த்தைகள் சூப்பர் ஹீரோக்களை கண்டபடி சூடேற்ற் இருக்கின்றன. 
தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர்களின் நிலை எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு...”என்ன பண்ணுறது எல்லா மாஸ் ஹீரோக்களும் ஏழைகளாக பார்த்துத்தான் தன் படத்தை தயாரிக்க வாய்ப்பு தருகிறார். ரஜினி லிஸ்டில் பரம ஏழை தயாரிப்பாளர்கள் பத்து பேர் அடங்கிய லிஸ்ட் இருக்கிறது. அவர்களுக்குதான் மீண்டும் மீண்டும் வாய்ப்பு தருகிறார். 

அஜித்தும் அப்படித்தான் ஏழை தயாரிப்பாளருக்குதான் வாய்ப்பு தருகிறார். ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் எனும் பரம ஏழையின் தயாரிப்பில்தான் தொடர்ந்து நடிக்கிறார். விஜய்யும்  இப்படித்தான். கோடிக்கோடியாய் சம்பாதித்து வைத்துள்ளவர்களை மேலும் மேலும் கோடீஸ்வரர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஹீரோக்கள். இதில் இவர்களுக்கு அரசியல் ஆசை வேறு. எல்லோருக்கும் எம்.ஜி.ஆர். என்று நினைப்பு. 

ஆனால் எம்.ஜி.ஆரின் நிழலைக் கூட இவர்களால் தொட முடியாது. பத்துப் படம் நீ நடிச்சுட்டா நீ என்ன எம்.ஜி.ஆரா? அந்த மனுஷன் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வந்தபோது அதில் முப்பது ஆயிரத்தை ஏழைகளுக்குக் கொடுத்தார். ஆனால் இவர்களோ ஏழை தயாரிப்பாளர்களுக்கு கூட கைகொடுப்பதில்லை. எம்.ஜி.ஆர். நடித்த படத்தை பத்து முறை கூட பார்த்தார்கள் மக்கள். ஆனால் இவர்கள் (ரஜினி, கமல்) படங்களை இரண்டாவது முறை பார்க்கவும் கூட ஆள் கிடையாது.” என்று வெளுத்திருக்கிறார். இதன் ரியாக்‌ஷனை கவனிப்போம்!
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!