"இந்த படத்துல அவர் வேற மாதிரி போலீஸ்".. சரத் மற்றும் அமிதாஷ் நடிப்பில் பரம்பொருள் - டீசர் வெளியானது!

Ansgar R |  
Published : Jul 14, 2023, 07:03 PM IST
"இந்த படத்துல அவர் வேற மாதிரி போலீஸ்".. சரத் மற்றும் அமிதாஷ் நடிப்பில் பரம்பொருள் - டீசர் வெளியானது!

சுருக்கம்

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் தனுஷின் விஐபி படத்தில் வில்லனாக நடித்திருந்த அமிதாஸ் பிரதன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

கவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சி. அரவிந்தராஜ் இயக்கத்தில், இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜாவின் இசையில் புதிதாக உருவாக்கி உள்ள திரைப்படம் தான் பரம்பொருள். தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் தனுஷின் விஐபி படத்தில் வில்லனாக நடித்திருந்த அமிதாஸ் பிரதன் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். வெளியாகி உள்ள டீசரை பொருத்தவரை இந்த திரைப்படம் சிலை கடத்தல் தொடர்பான ஒரு திரைப்படமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் அண்மையில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான "போர் தொழில்" திரைப்படத்தில் வருவது போல இந்த திரைப்படத்தில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இல்லாமல் சற்று மாறுபட்ட வேடத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

கடத்தப்படும் சிலைகளை போலீசார் மீட்கும் பொழுது அவற்றை ஆய்வு செய்யும் அதிகாரியாக அமிதாஸ் பிரதன் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கு இடையே நடக்கும் சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையே இந்த திரைப்படத்தின் திரைக்கதையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?