
மதுரையில் \ தனியார் கருத்தரிப்பு மையத்தை நடிகர் சிவகுமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். ரிப்பன் கட் பண்ணுவதற்கு சிவகுமார் அருகில் வரும்போது, ஓரமாக நின்ற ரசிகர் ஒருவர் தனது செல்போனை உயர்த்தி செல்பி எடுக்கும் ஆவலில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராத நேரத்தில் சிவகுமார் திடீரென செல்பி எடுக்கும் இளைஞர் கையிலிருந்த செல்போனைத் தட்டிவிட்டார். அந்த இளைஞர் கடும் அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ பதிவு பெரும் வைரலாகப் பரவியது. இதை வைத்து மீம்ஸ் எல்லாம் உருவாக்கி வெளியிட்டார்கள். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இளைஞர் செல்போனைத் தட்டி விட்டது ஏன் என்று சிவகுமார் விளக்கம் அளித்தார்.
ஆனாலும் அந்த விளக்த்தை ஏற்காத நெட்சன்கள் சிவகுமாருக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்ததோடு , அவருக்கு புது செல்போன் வாங்கித் தர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் செல்போனை தட்டி விட்ட சம்பவத்துக்கு சிவகுமார் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். ராகுல் என்ற அந்த ரசிகரும், அய்யோ என செல்போன் போச்சே என புலம்பிக் கொண்டிருந்தார்
இந்நிலையில் நடிகர் சிவகுமார் தான் தட்டிவிட்ட செல்போனுக்கு பதிலாக 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய செல்போன் ஒன்றை வாங்கி ராகுலுக்கு கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட ராகுல், தனக்கு நியாயம் கிடைக்கச் செய்த நெட்டிசன்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருக்காவிட்டால இது சாத்தியமில்லை என்றும் ராகுல் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.