நடிகை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண் கலங்க வைக்கும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் இருந்து பசி பட்டினியோடு நடந்தே செல்லும் ஒரு குடும்பத்தின் சோகத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண் கலங்க வைக்கும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் இருந்து பசி பட்டினியோடு நடந்தே செல்லும் ஒரு குடும்பத்தின் சோகத்தை பகிர்ந்துள்ளார்.
கொரோன வைரஸின் தாக்கம், உலக நாடுகளை அடுத்து, இந்தியாவிலும் அதன் தாக்கத்தை துவங்கியது. அதனை கட்டு படுத்தும் விதமாக, பாரத பிரதமர் மோடி அதிரடியாக 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
இப்படி ஒரு சூழல் வரும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே திடீர் என அணைத்து வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் இருந்தபடி தங்களுடைய பணியை செய்து வருகிறார்கள்.
குறிப்பாக டெல்லியில் போக்குவரத்து வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால், அங்கு தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள் பலர், நடை பயணமாகவே தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். பசி பட்டினியோடு செல்லும் இவர்களுக்கு பெரிய மனதோடு யாரவது சாப்பாடு கொடுத்தால் தவிர சாப்பிட வேறு வழி இல்லை.
இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நயன் காதலர் விக்னேஷ் சிவன். அதில் , சோகம்.... சோகம்.... சோகம்... மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி நடக்க துவங்கியுள்ளனர். இதெல்லம் வேகமாக முடிவடையவும், நாளைய நாள் நன்றாக இருக்கவும் பிராத்திப்பதாக கூறியுள்ளார்.
கண் கலங்க வைக்கும் வீடியோ இதோ:
A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on Mar 30, 2020 at 12:22am PDT