விஜய் சேதுபதி (Vijaysethupathy) நடித்துள்ள திரைப்படமும், சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படமும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நயன் காதலர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில், 'நானும் ரௌடி' தான் படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி என மூன்று தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக உள்ளது.
'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அவ்வப்போது இந்த படத்தின் புதிய அப்டேடுகளை படக்குழு வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தை பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், இதே தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படமும் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'டான்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த படமும் விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரீலீசும் பிப்ரவரி 3 ஆம் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.