சைலன்டா மேட்ற முடிச்ச நயன்தாரா..! எப்படித்தான் "கீப் அப்" பண்றாங்களோ..?

First Published Oct 28, 2017, 12:39 PM IST
Highlights
nayantara bought new home in chennai


சைலன்டா மேட்ற முடிச்ச நயன்தாரா..! குடியேற புது பங்களா ரெடி..! எல்லா வேலையும் சைலன்டா செய்யும் “நயன்தாரா- விக்னேஷ் சிவன்” 

காதல் கிசு  கிசு வில் அடிக்கடி சிக்கும் நயன் தாரா  தற்போது  விக்னேஷ் சிவன் மீது தான் அதிக காதல் கொண்டவராக  உள்ளார்.

எப்படியோ பிரபு தேவாவை மறந்து, விக்னேஷ் சிவன் நினைப்புதான் அதிகம் நயன்தாராவுக்கு உள்ளது  என்று கூறும் அளவிற்கு  விக்னேஷ் சிவனுடன்  எங்கு சென்றாலும் அவருடன் கை கோர்த்து  செல்கிறார்  

நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது, நயனுக்கும்  அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும்  காதல் மலர்துள்ளது.

அதனை  தொடர்து  பல  பல  கிசு கிசுகு ஆளான இவர்கள் இருவரும், அவர்கள் காதல் செய்வதை நிரூபிக்கும் வகையில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை வெளிநாட்டில் பிரமாண்டமாக கொண்டாடினார்.அதுமட்டுமா சாருக்கு சொகுசு காரையும் பரிசளித்தார் நயன்தாரா.

இப்படியே எவ்வளவு நாள் தான் சுற்றுவது என யோசனை செய்த இவர்கள் பேசாம ரகசிய திருமணம் செய்துகொள்ளலாமா என திட்டம் போட்டு உள்ளனர்.

குடியேற  பங்களா  ரெடி 

ரகசிய திருமணம் செய்து இருவரும் ஒன்றாக வாழ சென்னையில் பங்களா ஒன்றை இந்த ஜோடி வாங்கியுள்ளதாக நட்பு  வட்டாரங்கள் மூலமாக  மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வருகிறது 

திருமணம் முடிந்தபின், இவர்கள் வாங்கியுள்ள இந்த புதிய  பங்களாவில்  தான் குடியேற உள்ளதாக  தகவல்கள் கசிந்துள்ளது. 
 

 

click me!