25 வருடங்களாக பெற்றோரை எட்டிப்பார்க்காத நடிகர் நாசர்...

By Muthurama LingamFirst Published Mar 24, 2019, 10:41 AM IST
Highlights

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநர்,நடிகர் சங்கத்தலைவர் என்று பல முகங்களுடன் சமூகத்தில் கெத்தாக அலையும் நடிகர் நாசரின் இன்னொரு அதிர்ச்சிகரமான முகத்தைத் தோலுரித்துக்காட்டி ஒரு இரண்டு நிமிடக் காணொளி மூலம் பார்ப்பவர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அவரது உடன்பிறந்த சகோதரர் ஜவஹர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநர்,நடிகர் சங்கத்தலைவர் என்று பல முகங்களுடன் சமூகத்தில் கெத்தாக அலையும் நடிகர் நாசரின் இன்னொரு அதிர்ச்சிகரமான முகத்தைத் தோலுரித்துக்காட்டி ஒரு இரண்டு நிமிடக் காணொளி மூலம் பார்ப்பவர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அவரது உடன்பிறந்த சகோதரர் ஜவஹர்.

ஜவஹர் பேசியுள்ள காணொளியின் சாராம்சம் இதுதான்...கடந்த இருபத்தைந்து வருடங்களாகவே செங்கல்பட்டில் கடுமையான வறுமையில் வசிக்கும் பெற்றோர்களை நாசர் கண்டுகொள்வதோ உதவி செய்வதோ இல்லை. அவர்களது பேரன்களைக் கூட ஒன்றிரண்டு முறை மட்டுமே கண்ணில் காட்டியுள்ளார்.

இது குறித்து நடிகர் சங்கத்துக்கு புகார் கொடுக்க ஜவஹர் சென்றபோது அதை ஒருவரும் பொருட்படுத்தவில்லை.காரணம் நடிகர்களுக்கு மத்தியில் அவருக்கு உள்ள மிஸ்டர் நல்லவர் என்ற இமேஜ். மேடைகளில் நல்லது கெட்டது, குறிப்பாக சக மனிதர்கள் மீது அன்பு செலுத்துவது  குறித்து இலக்கண இலக்கியத்தோடு உரையாற்றும் நாசர் தன்னைப் பெற்றெடுத்தவர்கள் விஷயத்தில் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டிருப்பதை ஜவஹர் சொல்லும்போது கேட்பவர்களின் நெஞ்சம் பதை பதைக்கிறது.

click me!