
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'நாச்சியார்' திரைப்படம் வரும் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரிலும் ஜோதிகா காக்கி உடையுடன் ஒரே ஒரு வசனம் தான் பேசியுள்ளார். அது 'கோயிலா இருந்தாலும் குப்ப மேடா இருந்தாலும் எங்களுக்கு ஒண்ணுதான்' என்கிற வசனம்.
டீசரின் ஆரம்பத்தில்... ஜி.வி. பிரகாஷ் செல்லாத்தா மாரியாத்தா என பின்னணியில் பாடல் ஒலிக்க சாமிக்கு பூஜை செய்வது போல் உள்ளது.
பின் முஸ்லீம்கள் பற்றிய 'அல்லா அல்லா' பாடல்
அடுத்ததாக கிருஸ்துவர்களின் 'தேவரின் கோவிலிலே அனைவரும் குழந்தைகளே' பாடல்
புத்திசத்தை பற்றிய பாடல் காட்சி
பின் ஜோதிகாவின் தெறி வசனம் என இந்த இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்தப்படத்தின் முதல் டீசர் வெளியானபோதும் ஜோதிகா தே... என்கிற ஒரு வார்த்தை தான் பேசினார். ஜோதிகா பேசிய அந்த வார்த்தையால் மிகப்பெரிய சர்ச்சைகள் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.