பிக்பாஸ் ஹவுஸ் மேட்சுடன் ஒன்று சேர்ந்த சூப்பர் சிங்கர்ஸ்! திறமையை வெளிக்காட்ட முதலில் களத்தில் குதித்தது யார் தெரியுமா?

By manimegalai aFirst Published Oct 1, 2019, 12:25 PM IST
Highlights

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 16 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது நான்கு பிரபலங்கள் மட்டுமே மக்களிடம், அதிக ஓட்டுக்களை பெற்று பைனலில் என்ட்ரி ஆகி உள்ளனர்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 16 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது நான்கு பிரபலங்கள் மட்டுமே மக்களிடம், அதிக ஓட்டுக்களை பெற்று பைனலில் என்ட்ரி ஆகி உள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் ஹவுஸ் மேட்ஸ்சுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக பார்த்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், மற்றும் ரேஷ்மா ஆகியோர் வீட்டிற்குள் வந்து மாற்ற போட்டியாளர்களுக்கு சில பரிசுகள் கொடுத்து, இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

மேலும் பிக்பாஸ் இந்த வாரம் முழுவதும், உங்களுடைய திறமையை வெளிக்காட்டி நீங்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் ஹவுஸ் மேட்ஸ்சிடம் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து, இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, இன்று பின்னணி பாடல்களை பாடி வரும் பிரபலங்கள், மற்றும் இசை குழுவினருடன், முகேன் தன்னுடைய பாடல் திறமையை வெளிக்காட்டும் ப்ரோமோ வெளியாகியள்ளது.

அந்த ப்ரோமோ இதோ

இல்லத்தில் இன்று.. - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. pic.twitter.com/JaAgpPesO4

— Vijay Television (@vijaytelevision)

 

click me!