
1980-90-களில் மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்த தம்பி கண்ணந்தானம் உடல்நலக் குறைவால் நேற்று கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 65.
அவர் இயக்கிய 'ராஜாவிண்டே மகன்' திரைப்படம்தான் மோகன்லாலை கேரளாவில் ஒரே இரவில் சூப்பர் ஸ்டாராக்கியது.
இதே படம்தான் தமிழில் 'மக்கள் என் பக்கம்' என்கிற பெயரில் சத்யராஜ் அம்பிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடியது.
மேலும் 'தவலம்', 'திவசம்', 'பாஸ்போர்ட்', 'இந்திரஜாலம்', 'நாடோடி', 'நிர்ணயம்', 'மாந்திரிகம்' பூமியிலே ராஜாக்கமார்’ உட்பட 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய தம்பி சில படங்களை தயாரிக்கவும் சில படங்களில் நடிக்கவும் செய்தார். அவரது படங்களில்ஆக்சன் படங்களுக்கே உரித்தான விறுவிறுப்பான திரைக்கதையும், இயக்கமும் இருக்கும்.
சமீப காலமாக அவருடைய ராஜாவிண்டே மகனின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்காக மோகன்லாலிடம் கால்ஷீட் கேட்டுக் கொண்டேயிருந்தார். லாலும், ’இதோ இதோ’ என்று ஏதேதோ சொல்லித் தள்ளிப் போட்டுக் கொண்டே போனார். இப்போது ஒரேயடியாக இயக்குநர் தம்பி கண்ணந்தானம் விடைபெற்றுவிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.