ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார்...?முதலில் பதில்தெரிந்து கொள்ளும்  பிரதமர் மோடி,  எலிசபெத் ராணி....

 
Published : Mar 02, 2017, 05:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார்...?முதலில் பதில்தெரிந்து கொள்ளும்  பிரதமர் மோடி,  எலிசபெத் ராணி....

சுருக்கம்

modi and elizhabath queen see the special show for bahubali

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி 2' படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் பிரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகமெங்கும்ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் அதற்கு முன்னர் பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து ராணி எலிசபெத் உள்பட சர்வதேச பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. இதில் திரையிடப்படும் படங்களில் ‘பாகுபலி 2’ம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உள்பட பல பிரபலங்கள் ‘பாகுபலி 2’ம் பாகத்தை இவ்விழாவில் காணவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ