
சிலம்பம் மட்டுமின்றி, தமிழர்களின் பல்வேறு வீர விளையாட்டுகளுக்குத் திரையில் புது ரத்தம் பாய்ச்சினார் மக்கள் திலகம். சக்கரவர்த்தித் திருமகன் படத்தில் மற்போர், ரிக்சாக்காரன் படத்தில் காண்போரைக் கண் இமைக்க விடாத சுருள்வாள் வீச்சு. உழைக்கும் கரங்கள் படத்தில் தமிழர்களின் ஆதி ஆயுதமான ‘மடுவு’ (மான்கொம்பு) சண்டை. இப்படி ஒவ்வொரு படத்திலும் ஒரு புதிய போர்க்கலையை அறிமுகப்படுத்தி, இளைஞர்களிடையே வீர விளையாட்டுகள் மீதான ஆர்வத்தைத் தூண்டினார்.