
நிவின் சத்யா தற்போது நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். இந்நிலையில் தற்போது, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மெர்சல் படத்திற்கு வரும் பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், அனைத்து படங்களுக்கும், எடுக்கும் போது எந்தப் பிரச்னையும் வருவதில்லை ஆனால் ரிலீஸ் என்று அறிவித்து விட்டால் மட்டும் பல பிரச்சனைகள் வந்துவிடுகின்றன. ஆனால் தற்போது உருவாகியுள்ள மெர்சல் மிகவும் பிரமாண்டமான சூப்பர் திரைப்படமாக தயாராகியுள்ளது. கண்டிப்பாக இந்தப் படம் வெற்றிப் படமாக அமையும். மேலும் இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் ஹேமா மற்றும் படக்குழுவினர் தங்களுடைய உழைப்பை போட்டுள்ளனர்.
ஆனால் வெளியிடுவதில் சிறு அரசியல் தடைகள் தற்போது அவர்களுக்கு உருவாகியுள்ளது. எத்தனை பிரச்சனை வந்தாலும் மெர்சல் கண்டிப்பாக வெளிவரும், சூப் டூப்பர் ஹிட் ஆகும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.