வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட நடிகை...

Published : Aug 10, 2019, 10:37 AM IST
வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட நடிகை...

சுருக்கம்

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், இந்தி சின்னத்திரை நடிகை ஒருவர், தனது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.  

திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், இந்தி சின்னத்திரை நடிகை ஒருவர், தனது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி மற்றும் மராத்தி சீரியல் நடிகை பிரக்ன்யா பிரசாந்த் பார்கர் (40). இவர் தனது மகள் ஸ்ருதி, கணவர் பார்கருடன் மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகிலுள்ள கல்வாவில் வசித்து வந்தார். பார்க்கர், நேற்று காலை ஜிம்முக்கு சென்றுவிட்டு 9.30 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் பிரக்ன்யாவும் படுக்கையில் உயிரிழந்த நிலையில் ஸ்ருதியும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் உதவியுடன், அவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவர்கள் இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் நடிகையின் வீட்டைப் போலீஸார் சோதனையிட்டப்போது அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ’எனது மகளை கொன்றுவிட்டு நானும்  தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் காரணமல்ல’...என்று பிரக்ன்யா எழுதிய கடிதம் வீட்டில் கிடைத்தது. கடந்த சில வருடங்களாகவே, பிரக்ன்யாவுக்கு சரியான நடிப்பு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் அவர் மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!