இறங்கி வந்து உதவி செய்யும் மனீஷா கொய்ராலா... - பிரமித்து போன பொதுமக்கள்...!!!

 
Published : Aug 23, 2017, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
இறங்கி வந்து உதவி செய்யும் மனீஷா கொய்ராலா... - பிரமித்து போன பொதுமக்கள்...!!!

சுருக்கம்

manisha koiraala help for public

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பம்பாய்' திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. இதனை தொடர்ந்து கமலுடன் இந்தியன், ரஜினியுடன் பாபா, முதல்வன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதே போல இந்தியிலும் முன்னணி நடிகர்களுடன் 50 திற்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்த இவர் மீண்டும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சொந்த ஊரான நேபாளில் கனமழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் அதில் சிக்கியுள்ளனர்.

இவர்களுக்கு உதவிகள் செய்யும் பொருட்டு மனீஷா கொய்ராலா ஐக்கிய  நாடுகள் சபையின் மக்கள் நிதியம் என்ற அமைப்பின் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் மற்றும் தங்க வைக்க இடம் ஆகியவற்றை செய்துகொடுத்து உதவி வருகிறார். 

மனீஷா எந்த ஒரு தயக்கமும் இன்றி சேர் சகதியில் இறங்கி வேலை செய்வதை பார்த்து நேபாள மக்கள் வியப்பில் உள்ளார்களாம். மனீஷாவின் இந்த செயலை பார்த்த பலர் அவருக்கு தங்களுடைய வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!