மர்மமான முறையில் கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர்..!

 
Published : Jan 17, 2018, 03:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
மர்மமான முறையில் கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர்..!

சுருக்கம்

malayalam actor death in goa beach

பிரபல தயாரிப்பாளர் PKR பிள்ளையின் மகனும் நடிகருமான சித்துவின் உடல் கோவா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 27 வயதாகும் சித்து கடந்த 12 ஆம் தேதி கோவா சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் யாருடன் சென்றார், இவருடைய மரணத்திற்கு யார் காரணம் என்பது மர்மமாகவே உள்ளது. 

இவர் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'செகண்ட் ஷோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் சித்துவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

இந்நிலையில் இவர் இறந்த செய்தி மலையாள திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய மரணத்திற்கு துல்கர் சல்மான் தன்னுடைய இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதே போல் பல பிரபலங்கள் இவருடைய குடும்பத்தினருக்கு தொடர்ந்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய மர்ம மரணத்திற்கு காரணம் என்ன? என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிர் - ஞானம் இடையே சண்டையை மூட்டிவிட்ட அறிவுக்கரசி.. பிரியும் ஆதி குணசேகரன் ஃபேமிலி - எதிர்நீச்சல் தொடர்கிறது
யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!