
கொரோனா தொற்று காரணமாக, தயாரிப்பாளரும், நடிகருமான எஸ்.ஏ.ஹாசன் என்பவர், உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸின் தாக்கம் சமீப காலமாக இந்தியாவிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் இருந்து, மக்களை மீட்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு முயற்சியோடு போராடி வந்தாலும், முக கவசம் அணியாமல் செல்வது, அரசாங்க விதிமுறைகளை மீளும் விதத்தில், ஒன்று கூடி நிற்பது போன்று நம்மை அறியாமலேயே செய்யும் சிறு சிறு தவறுகளும் கொரோனா பிரச்சனை நம்மை தாக்குவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
பணக்காரர், ஏழை என, எவ்வித பாரபச்சமும் இன்றி மக்களை தாக்கி வரும் கொரோனா வைரஸ் பொதுமக்களை மட்டுமின்றி திரையுலகினர்களையும் விட்டு வைக்கவில்லை. தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் தொழிலதிபராக இருப்பவர் எஸ்.ஏ.ஹாசன். இவர் மலையாளத்தில் 'துபாய்க்காரன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார். இவர் சமீபத்தில் வேலை காரணமாக துபாய் சென்ற நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டபோது, இவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை மேலும் மோசமானதால் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவருடைய இழப்பு மலையாள திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.