தற்கொலைக்கு முயன்றாரா மதுமிதா? என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்!

By manimegalai aFirst Published Aug 17, 2019, 11:08 AM IST
Highlights

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகள், குழாய் அடி சண்டையை மிஞ்சும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இவ்வளவு நாட்கள், ஒரே அணியாக இருந்து சண்டை போட்டு வந்த, பிக்பாஸ் குழுவினர் வனிதாவின் வருகைக்கு பின் ஆண், பெண் என இரண்டு அணிகளாக பிரிந்து மோதி கொள்கிறார்கள்.
 

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகள், குழாய் அடி சண்டையை மிஞ்சும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இவ்வளவு நாட்கள், ஒரே அணியாக இருந்து சண்டை போட்டு வந்த, பிக்பாஸ் குழுவினர் வனிதாவின் வருகைக்கு பின் ஆண், பெண் என இரண்டு அணிகளாக பிரிந்து மோதி கொள்கிறார்கள்.

மேலும், லாஸ்லியா ஆண்களின் அணியுடன் சேர்ந்து கொண்டு, ஓவர் லூட்டி அடிக்கிறார். இது சில ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நேற்றைய தினம், கூட பெண்களை ஆண்கள் பெண்களை யூஸ் செய்து கொள்வதாக கூறினார் மது. இது மிகப்பெரிய பிரச்சனையாக பிக்பாஸ் வீட்டில் வெடித்தது. இதை தொடர்ந்து தலைவருக்கான போட்டியில், மது வெற்றி பெற்று. அடுத்த வார தலைவராக மாறினார்.

இது ஒரு புறம் இருக்க, மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்ததாக, ஒருவர் ட்விட் செய்து ஒட்டு மொத்த பிக்பாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். ஆனால் இப்படி பரவி வரும் தகவல் எந்த அளவிற்கு நம்பகத்தன்மையானது என்பதும், ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இது போன்ற சந்தேகங்களுக்கு இன்று, பிக்பாஸ் திரையில் தோன்றும்... கமல்ஹாசன் பதில் கொடுப்பாரா? உண்மையில்  பிக்பாஸ் வீட்டில் என்ன தான் நடக்கிறது என்பதை விவரிப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம். 

click me!