ரஜினி ரசிகர்களை அவர் முன்னிலையிலேயே ‘கோமாளிகளா’என்று அசிங்கப்படுத்திய நடிகர் சிவக்குமார்...

By Muthurama LingamFirst Published Aug 17, 2019, 10:51 AM IST
Highlights

முன்பெல்லாம் ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்த மறுநாள் வரைதான் செய்தி. அடுத்து மறந்துவிடுவார்கள். ஆனால் தற்போது அவை துண்டு துண்டான வீடியோக்களாக வெட்டி ஒட்டி வெளியிடப்படுவதால் ஒரு வாரம் கழித்துகூட சர்ச்சைகள் கிளம்புகின்றன. அந்த வகையில் ரஜினி ரசிகர்கர்களை கோமாளிகள் என்று சூர்யாவின் தந்தை சிவக்குமார் திட்டியிருப்பது வைரலாகி வருகிறது.

முன்பெல்லாம் ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்த மறுநாள் வரைதான் செய்தி. அடுத்து மறந்துவிடுவார்கள். ஆனால் தற்போது அவை துண்டு துண்டான வீடியோக்களாக வெடி ஒட்டி வெளியிடப்படுவதால் ஒரு வாரம் கழித்துகூட சர்ச்சைகள் கிளம்புகின்றன. அந்த வகையில் ரஜினி ரசிகர்கர்களை கோமாளிகள் என்று சூர்யாவின் தந்தை சிவக்குமார் திட்டியிருப்பது வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற நடிகர் சிவகுமார், தன்னிடம் செல்பி எடுக்க வந்த நபரின் செல் போனை தட்டி விட்ட வீடியோ சமூக செல் வைரலாக பரவியது. இதனால் சிவ குமார் மீது பல்வேறு விமர்சனங்களை எழுந்தது.  இந்த விவகாரத்தை அடுத்து நடிகர் சூர்யாவும் விளக்கமளித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் செல் போனை இழந்த அந்த இளைஞருக்கு சிவகுமார் சார்பில் புதிய போன் ஒன்றும் கொடுக்க பட்டது. இருப்பினும் அடுத்தும் ஒரு வீடியோ ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாகவே அவருக்கு செல்ஃபி சிவக்குமார் என்ற பட்டம் நிலைத்துவிட்டது.

இந்த நிலையில் பிரபல தமிழ் சினிமா கதாசிரியரான கலைஞானம் அவர்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் கதாசிரியர் பணிபுரிந்து வருவதை பாராட்டும் விதமாக அவருக்கு பாராட்டு விழா ஒன்றை இயக்குனர் பாரதி ராஜா ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் பாக்யராஜ், அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினி மற்றும் கலைஞானம் பற்றி தேவர் பிலிம்ஸ் தேவர் கூறியதை பற்றி மேடையில் பேசிக்கொண்டு இருந்தார் சிவகுமார். அப்போது ரஜினி குறித்து பெருமையாக பேசும் போதெல்லாம் ரஜினி ரசிகர்கள் நச்சுநச்சென்று ஓயாமல் கைதட்டிக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் அதனை இடையூறாக கருதிய சிவகுமார், ரசிகர்களை பார்த்து, கேளுங்கபா மொதல்ல கதையை கேட்டுட்டு அப்புறம் கையத் தட்டுங்க, கோமாளிங்களா என்று சற்று கோபத்துடன் கூறினார் சிவகுமார். இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. பொது இடங்களில் பொறுமை இழக்கும் சிவக்குமார் தொடர்ந்து அசிங்கப்பட்டு வருகிறார்.

click me!