வீடு திரும்பினார் கவிஞர் வைரமுத்து... மருத்துவமனையில் நடந்தது என்ன?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 16, 2020, 01:59 PM IST
வீடு திரும்பினார் கவிஞர் வைரமுத்து... மருத்துவமனையில் நடந்தது என்ன?

சுருக்கம்

அங்கு வைரமுத்துவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருதய கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் தீயாய் பரவியது.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து இன்று காலை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டத்தை அடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தாகவும் கூறப்பட்டது. 

அங்கு வைரமுத்துவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருதய கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் தீயாய் பரவியது. இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் மிகுந்த பதற்றமடைந்தனர்.இதனிடையே,  வைரமுத்து தரப்பிலிருந்து விளக்கம் அளித்த அவருடைய உதவியாளர், அவர் வழக்கமான சோதனைகளுக்காக மட்டுமே மருத்துவமனை வந்துள்ளதாகவும், கவிப்பேரரசு நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

 

இதையும் படிங்க: பட்டு பாவாடை சட்டையில் ‘குட்டி’ நயன் அனிகா... மிடுக்கான போஸில் மிரள வைக்கும் போட்டோஸ்...!

தற்போதைய தகவலின் படி, காலை தனியார் மருத்துவமனைக்கு சென்ற கவிஞர் வைரமுத்து வழக்கமான பரிசோதனைகளை முடித்துக் கொண்டு அரைமணி நேரத்திலேயே வீடு திரும்பிவிட்டாராம். இதனால் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!