Kamakodiyan : கவிஞர் காமகோடியான் காலமானார்.. எம்.எஸ்.வி. முதல் யுவன் வரை 3 தலைமுறைகளுக்கு பாட்டெழுதியவர்..

Ganesh A   | Asianet News
Published : Jan 06, 2022, 11:29 AM ISTUpdated : Jan 06, 2022, 12:42 PM IST
Kamakodiyan : கவிஞர் காமகோடியான் காலமானார்.. எம்.எஸ்.வி. முதல் யுவன் வரை 3 தலைமுறைகளுக்கு பாட்டெழுதியவர்..

சுருக்கம்

உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் காமகோடியன், இன்று காலமானார். அவருக்கு வயது 76.

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான காமகோடியன் இன்று காலமானார். தமிழ் திரையுலகில் 1980களில் பிரபலமாக இருந்த பல சூப்பர் ஹிட் பாடல்கள் கவிஞர் காமகோடியன் எழுதியது தான். 

இவர் எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதி புகழ்பெற்றார். குறிப்பாக கடந்த 2002 ல் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில், இவர் எழுதி வெளியான ‘௭ன் அன்பே ௭ன் அன்பே பாடல்’ இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவர் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திருட்டு ரயில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதினார். அதன்பின் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த காமகோடியன், இன்று காலமானார். அவருக்கு வயது 76.

கவிஞர் காமகோடியனின் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!