அதுக்குள்ள இப்படி மாறிவிட்டாரே...! விட்டு கொடுத்த கவினை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் ஏமாற்றிய லாஸ்லியா!

By manimegalai aFirst Published Sep 29, 2019, 1:48 PM IST
Highlights

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், கவின் வெளியேறியது லாஸ்லியா பைனலுக்கு செல்ல வேண்டும் என்பதால் தான். இது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்குமே அப்பட்டமாக தெரிந்தாலும், கவின் தனக்கு பைனலுக்கு செல்ல விருப்பம் இல்லாததால் வெளியேறியதாக தெரிவித்தார்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், கவின் வெளியேறியது லாஸ்லியா பைனலுக்கு செல்ல வேண்டும் என்பதால் தான். இது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்குமே அப்பட்டமாக தெரிந்தாலும், கவின் தனக்கு பைனலுக்கு செல்ல விருப்பம் இல்லாததால் வெளியேறியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினம் 5 போட்டியாளர்களுக்கும் ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. போட்டியாளர்கள் தாங்கள் விரும்பும் ஒருவருக்கு ஒரு கப்பில் ஏதேனும் குறுஞ்செய்தியை எழுதி தெரிவிக்க வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க்.

முதலாவதாக வரும் முகேன் அவருடைய காதலி ஸ்பார்கில்காக காதல் கலந்த ஒரு மெசேஜ் கொடுக்கிறார். அடுத்ததாக சாண்டி தன்னுடைய மனைவி சிவிலியாவிற்கு " மைடியர் கண்ணம்மா நீ தான் என் உலகம்... நீதான் என் ஆன்மா.... ஐ லவ் யூ சோ மச் என்றும் நீதான் என் பொன்வசந்தம் என தெரிவிக்கிறார்.

இதைத்தொடர்ந்து ஷெரின் அவருடைய வாழ்வில் மிகவும் உறுதுணையாக இருந்த இரண்டு பெண்களுக்கு தன்னுடைய நன்றிகளையும் தெரிவிக்கிறார். இவங்க இல்லை என்றால் கடந்த வருடம் தனக்கு நரகமாக சென்றிருக்கும் எனவும், இவர்கள் இருவருக்கும்  என்ன வேண்டுமானாலும் செய்வேன் என அன்புடன் ஒரு மெசேஜ் கொடுக்கிறார்.

இவரை தொடர்ந்து பேச வரும் தர்ஷன் அவருடைய காதலியை மிகவும் மிஸ் செய்வதாக கூறுகிறார். இவரை தொடர்ந்து அனைவராலும் எதிர்பார்க்கப்படும் லாஸ்யா, கவினுக்கு ஏதேனும் சொல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தன்னுடைய தர்ஷி என்கிற அக்காவுக்காக ஒரு மெசேஜ் எழுதுவதாக கூறுகிறார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தனக்காக மட்டுமே யோசித்து, நான் வாழ்க்கை உயர வேண்டும் என நினைத்த ஒரு ஆன்மா அவர்தான் என்றும், அடுத்ததாக 4 பெண்கள் பெயரை கூறி அவர்கள் தன்னுடைய சகோதரிகள் அவர்களை மிஸ் செய்வதாக தெரிவிக்கிறார் லாஸ்லியா.

 

ஆனால் கடைசி வரை கவின் பற்றி ஒரு வார்த்தை கூட லாஸ் கூறாதது அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

click me!