இதை நிரூபித்தால் தமிழ்நாட்டை விட்டே போய்விடுகிறேன் - லாரன்ஸ் பதிலடி...!!!

 
Published : Feb 20, 2017, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
இதை நிரூபித்தால் தமிழ்நாட்டை விட்டே போய்விடுகிறேன் - லாரன்ஸ் பதிலடி...!!!

சுருக்கம்

நடிகர், நடன இயக்குனர் போன்ற பல முகங்களை கொண்ட  ராகவா லாரன்ஸ் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை மீட்கவும் , தன்னுடைய கலாச்சார சின்னமாக விளங்கும்  காளைகளை காக்கவும்  சாலையில் இறங்கி போராடினார். அதே போல் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்காக ஒரு கோடி வரை தன்னுடைய பணத்தை செலவும் செய்தார்.

மேலும் இவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பொது மக்களுக்கும், குழந்தைகள் சிகிச்சைக்காகவும்  பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில்  ஜல்லிக்கட்டிற்கு கிடைத்த வெற்றியை பிரமாண்டமாக கேக் வெட்டி மாணவர்களுடன் கொண்டாடியவர் மனதை உருக்கும் வகையில் ஒரு சில வார்த்தைகளை பேசினார்.

அவர் பேசியது... நான் ‘ஜல்லிக்கட்டு விஷயத்தில்  பணம் வாங்கியதாக சிலர் கூறுகின்றனர், மேலும்  அது  ஒரு கட்சிக்கு நான் ஆதரவு தெரிவித்ததாக கூறுகிறார்கள்.

நான் எந்த கட்சிக்காவது ஆதரவு தெரிவித்தேன் என்று நீங்கள் நிரூபியுங்கள், நான் தமிழகத்தை விட்டே செல்கிறேன், எனக்கு அரசியல் வேண்டாம்’ என்றும் கூறியுள்ளார். இந்த மாணவர்கள் போதும் என கூறினார் .

ஒருமுறை தேவைப்பட்டால் நான் அரசியலுக்கு வர தயார் என லாரன்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!