"இந்த முட்டாள்கள் திருந்தவே மாட்டார்கள்..." - தாறு மாறாக திட்டிய குஷ்பு.... யாரை தெரியுமா...?

 
Published : May 07, 2017, 05:12 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
"இந்த முட்டாள்கள் திருந்தவே மாட்டார்கள்..." - தாறு மாறாக திட்டிய குஷ்பு.... யாரை தெரியுமா...?

சுருக்கம்

kushboo talk with troll persons

சமூக வலைத்தளங்கள் எந்த அளவிற்கு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும்  பயனுள்ளதாக இருக்கின்றதோ, அந்த அளவுக்கு சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு களமாகவும் உள்ளது. 

குறிப்பாக டுவிட்டரில் ட்ரோல் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வெறும் நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட இந்த ட்ரோல் நாளடைவில் சம்பந்தப்பட்டவர்களின் மனம் புண்படும் அளவிற்கு  மாறிவிட்டது. குறிப்பாக அஜித், விஜய் ரசிகர்களின் ட்ரோல் எல்லை மீறும் அளவிற்கு உள்ளது.

இந்த நிலையில் ட்ரோல் செய்பவர்கள் குறித்து நடிகையும் அரசியல்வாதியும் குஷ்பு தனது டுவிட்டரில் காட்டமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

'பொதுவான நான் ட்ரோல் செய்பவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் சில சமயங்களில் அவர்கள் மொழியிலே அவர்களுக்கு பதிலடி கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று கருதுவேன் என்று கூறிய குஷ்பு பல மணி நேரம் டுவிட்டரில் ட்ரோல் செய்பவர்களுடன் மல்லுக்கட்டினார். 

பின்னர் கடைசியாக 'இந்த முட்டாள்கள் குரைத்து கொண்டேதான் இருப்பார்கள், இது இயற்கை. அவர்களை திருத்தவே முடியாது. நாம் நம் வேலையை பார்ப்போம்' என்று இந்த பிரச்சனையை முடித்து கொண்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயில் முதல் கோமதி வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்!
5 மினிட்ஸ் பிக்பாஸ் என்று கேட்ட மகள்கள்: சந்தோஷத்தில் திகைத்து நின்ற சாண்ட்ரா! அழ வைக்கிறீங்களேப்பா!