‘‘மாற்றத்தை கொண்டு வருவோம் “ ... நடிகை குஷ்பு சபதம் !

 
Published : Jan 03, 2017, 12:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
 ‘‘மாற்றத்தை கொண்டு வருவோம் “ ...  நடிகை குஷ்பு சபதம் !

சுருக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பதவிக்காலம் இந்த மாதம் முடிவடைகிறது .இதனையடுத்து பிப்ரவரி 5–ந் தேதி சென்னையில் தேர்தல் நடைபெற உள்ளது . இதில் விஷால் அணி சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். மற்றொரு அணியில் டைரக்டர் டி.ராஜேந்தர், ராதாகிருஷ்ணன், டைரக்டர் திருமலை ஆகியோரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டு இருப்பது தமிழ் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார் . அதில் ‘‘விஷால் அணியினர் என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற பெரிய பொறுப்புக்கு போட்டியிட நிறுத்தி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விஷால் மற்றும் அவரது அணியினர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் அணி  வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்றும் வாழ்க்கை என்பது எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவது எனவும் மாற்றத்தை கொண்டு வர கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்போம்.’’  என குஷ்பு மேலும் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரிலீஸ் ஆனபோது யாரும் பார்க்கல, இப்போ புகழ்கிறார்கள்'; கமல் படம் பற்றி ஆதங்கப்பட்ட ஸ்ருதிஹாசன்
ஜனநாயகன் ஆடியோ லாஞ்சுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா? விஜய்க்கு செக் வைத்த மலேசியா அரசு..!