கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் வில்லியாகும் மச்சான்ஸ் நடிகை!

Published : Jul 28, 2019, 02:11 PM IST
கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் வில்லியாகும் மச்சான்ஸ் நடிகை!

சுருக்கம்

பிரபல இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான, சுதீப் மற்றும் நித்யா மேனன் நடித்த, 'முடிஞ்சா இவனபுடி' படத்தை இயக்கினார். 

பிரபல இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான, சுதீப் மற்றும் நித்யா மேனன் நடித்த, 'முடிஞ்சா இவனபுடி' படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு பின், கடந்த மூன்று வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார்.  தற்போது  என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவை வைத்து, 'ஜெய் சிம்ஹா' என்கிற படத்தை இயக்க உள்ளார்.

தெலுங்கில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளிநாட்டில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தை சுற்றி உள்ள இடங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இந்த படத்தில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா ஜோடியாக சோனல் சவுகான் நடிக்க உள்ளதாகவும், இரண்டாவது நாயகியாக நடிகை வேதிகா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களை தொடந்து, இந்த படத்தில் பிரபல நடிகை நமீதா மிரட்டல் வில்லி வேடத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு
சோலி முடிஞ்சது... ஜனனியின் பிசினஸுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்