
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் எடுத்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.
கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், தற்போது அடுத்த அவதாரத்திற்கு தயாராகிவிட்டார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வல், கே.எச்.ரவிக்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான படம் கோமாளி. 90’ஸ் கிட்ஸ்களின் நினைவலைகளை தூண்டிவிட்ட இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
முதல் படத்திலேயே முத்திரை பதித்த பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் ஹீரோ அவதாரத்தையும் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்திற்கான நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அவதாரம் எடுக்கும் ரங்கநாதனுக்கு அவரது நலம் விரும்பிகள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.