
தமிழ் சினிமாவில் அறிமுகமான ஓரிரு வருடத்திலேயே முன்னணி நடிகை இடத்தைப் பிடிக்க போட்டு போடுகிறார், வேகமாக வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்! முன்னணி ஹீரோக்கள் படங்கள் உள்பட தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடிகைகள் பலரைப் பொறாமைப் பட வைத்துள்ளார்.
சூர்யாவுடன் இவர் நடித்து வெளியாகியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் விஜய்க்கு ஜோடியாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இவர் கமிட் ஆகியுள்ளார்.
மேலும் சாமி-2, சண்டக்கோழி-2 என பிஸியாக இருக்கும் இவர் நேற்று லிங்குசாமி வெளியிட்ட கவிதை புத்தக விழாவில் பங்கு கொண்டார். அங்கு அவர், எனக்கும் சுமாராக கவிதை எழுத வரும் என, அவர் எழுதிய கவிதையை வாசித்துக் காட்டினார். இதனைக் கேட்ட பலர் ஆச்சர்யத்தில் உறைந்து விட்டனர். காரணம் இவர் சுமாராக எழுதிய கவிதையே சூப்பராக இருந்ததாம்.
கீர்த்தி சுரேஷுக்கு ஏற்கனவே நன்றாக படம் வரையத் தெரியும் என திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் தற்போது கவிதையில் வேறு கலக்கியுள்ளார். இதனால் இவரைத் தொடர்ந்து பலர் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.