விஜய் கூறிய அந்த இரண்டு வார்த்தை....!!! கீர்த்திசுரேஷ் ஓபன் டாக்....!!!

First Published Dec 22, 2016, 1:18 PM IST
Highlights


இரண்டு படங்கள் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து மிக குறுகிய காலத்திலேயே தனுஷ்,  இளையதளபதி விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டக்கார நடிகை கீர்த்திசுரேஷ்.

தற்போது பொங்கலுக்கு வெளியாகும் 'பைரவா' படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் அவருடைய மார்க்கெட் இன்னும் பல மடங்கு எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'பைரவா' படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில்  கீர்த்திசுரேஷ்  கூறியுள்ளார்.  

சிறு வயதில் இருந்தே விஜய்யின் ரசிகையாக இருந்த நான், அவருக்கு ஜோடியாக நடிப்பது நிச்சயம் அதிர்ஷ்டம்தான் என்றும். 

எல்லோரும் கூறுவதுபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அதிகம் பேச மாட்டார் என்பது உண்மைதான். 

ஆனால் படப்பிடிப்பு முடிந்த தினத்தில் விஜய் என்னிடம்' நல்லா நடிச்சிருக்கீங்க' என்று இரண்டே வார்த்தைகளில் என்னுடைய நடிப்பை புகழ்ந்தார்.

விஜய் இந்த ரெண்டு வார்த்தையில் தன்னை பாராட்டியதே மிக அதிகம் என்று படக்குழுவினர் கூறினர். விஜய்யின் இந்த பாராட்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஓபன் டாக் கொடுத்துள்ளார் .

click me!