ஒவ்வொரு முறையும் பயந்து நடுங்குகிறேன்! கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல்!

By manimegalai aFirst Published Feb 20, 2019, 2:03 PM IST
Highlights

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 
 

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில் சினிமா வாழ்க்கை அனுபவங்கள் பற்றி பிரபல நாளிதழ் ஒன்றில் கூறியுள்ளார் கீர்த்தி. இது குறித்து அவர் கூறுகையில்.... "சினிமாவை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்ப்பார்கள். ஆனால் நடிகர்களுக்கு சினிமாதான் வாழ்க்கை. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு வாழ்க்கையை அனுபவிக்கிற மாதிரி நடிக்கிறோம்.  கதையைக் கேட்டபிறகு கதாபாத்திரத்தில் முழுமையாக நடிக்க முடியுமா? முடியாதா? என்று, பத்து முறை யோசிப்போம்.

அப்படியே நாங்கள் நடித்தாலும் அது ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்று சிந்திப்போம்.  இப்படி பல கேள்விகளோடு தான் படங்களை தேர்வு செய்து எல்லா நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர்.  

மற்றவர்களை விட எனக்கு இந்த கேள்விகள் அதிகமாகவே வரும்.  இப்படி கேள்விகள் கேட்டு நடிப்பதால்,  எனக்கு நல்லது தான் நடந்திருக்கிறது. ஒரு சினிமாவில் நடிக்கும் போது, ஒரு லட்சம் சந்தேகங்கள், பயங்கள், வந்தாலும் எல்லாவற்றிற்கும் இயக்குனரிடம் பதில் இருக்கும்.

ஆனாலும் ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் எனக்கு பயம் வந்து என்னை நடுங்க செய்யும். அப்போதைக்கு அந்த பயம் படபடப்பை ஏற்படுத்தலாம், முடிவில் எனக்கு நல்லதாக இருக்கும். இதனால் நான் நடிக்கும் கதாபாத்திரத்தில் இன்னும் அக்கறை செலுத்த முடிகிறது.

சினிமா பயணம் ஒரு சஸ்பென்ஸ் கதை மாதிரி இருக்க வேண்டும். குறிப்பாக 'மகாநதி' படம் நடிக்கும் போது பயந்து நடித்தேன்.  ஆனால் அது  வெற்றி பெற்ற போது,  அனுபவித்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்". 

click me!