அனைவர் மத்தியிலும் கண் கலங்கியவாறு பேசிய நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி!

Published : Jun 18, 2019, 07:47 PM IST
அனைவர் மத்தியிலும் கண் கலங்கியவாறு பேசிய நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி!

சுருக்கம்

பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்,  தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள திரைப்படம் தும்பா.   

பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்,  தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள திரைப்படம் தும்பா. 

இந்த படத்தில் கதாநாயகனாக கனா படத்தில் நடித்த நடிகர் தர்ஷன் நடித்துள்ளார்.  இந்தப் படத்தை ஹரிஷ்ராம் என்கிற இயக்குனர் இயக்கியுள்ளார்.  இப்படம் முழுக்க முழுக்க காட்டுக்குளேயே படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கியவாறு, இந்த படத்தின் இயக்குனருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பேசுகையில்,  சில படங்களின் நடிக்க வந்த வாய்ப்பை நானே தவிர்த்துள்ளேன்.  அதோடு என்னையும் சில இயக்குனர்கள் நிராகரித்துள்ளனர். அதற்கு காரணம் ஒல்லியான தோற்றம் மற்றும், நிறம் என்றும் கூறலாம். ஆனால் தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தவர் தும்பா பட இயக்குனர் ஹரிஷ்ராம் என கண்களில் கண்ணீரோடு கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!