நீயும் ஏதாவது கேளு..! லாஸ்லியாவிடம் நூல் விட்டு சாக்ஷியை கடுப்பேற்றும் கவின்!

By manimegalai aFirst Published Jul 9, 2019, 7:38 PM IST
Highlights

அட என்னதான் நடக்குது இந்த பிக்பாஸ் வீட்டுல? முதல்ல கவினை  காதல் வலையில் சிக்க வைக்க, அபிராமி படாத பாடு பட்டார். முடியாமல் போனதால், இப்போது சைலண்டாக சண்டை வாங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
 

அட என்னதான் நடக்குது இந்த பிக்பாஸ் வீட்டுல? முதல்ல கவினை  காதல் வலையில் சிக்க வைக்க, அபிராமி படாத பாடு பட்டார். முடியாமல் போனதால், இப்போது சைலண்டாக சண்டை வாங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என இருக்கும் லாஸ்லியாவிடம் வாண்டடாக சென்று கவின் பேச அதற்கு மூஞ்சில் அடித்தது போல் பதில் சொல்லுவது ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் கவின் மீண்டும் லாஸ்லியாவிற்கு நூல் விடுகிறார். 'உனக்கு என்ன வேண்டும்' என்று கவின் கேட்க அதற்கு லாஸ்லியா 'எனக்கு எதுவும் தேவையில்லை ஒண்ணும் வேண்டாம்' என்று மறுக்கின்றார். மத்தவங்க அவங்களுக்கு என்ன வேணுமோ கேக்குறாங்க உனக்கு என்ன வேண்டும்னு மீண்டும் மீண்டும் கேட்க, சாக்ஷி இவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை என தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

ஆனால் ஒன்றும் இல்லை என லாஸ்லியா தெரிவிக்கிறார். ஒரு வேலை இன்றைய ப்ரோமோவில், நீ என்னை பார்த்தாலும் பேச கூடாது என்பதை மனதில் வைத்து கொண்டு, கவினிடம் ஒருவேளை லாஸ்லியா பேச மறுக்கவும் வாய்ப்பு உள்ளது.

கண்டிப்பா ஏதோ இருக்கு! - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. pic.twitter.com/3p6RsNLBg4

— Vijay Television (@vijaytelevision)

click me!