அடேங்கப்பா..ஒருவழியாக கார்த்தியின் சர்தார் துவங்கியது. ஆனால் கொரோனா ஊரடங்கு..மீண்டும் முடங்கும் படப்பிடிப்பு

By Kanmani PFirst Published Jan 7, 2022, 12:42 PM IST
Highlights

கடந்த 2020-ம் ஆண்டு பூஜையுடன் துவங்கிய கார்த்தியின் சர்தார்  படம் அப்போது போடப்பட்ட ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக தள்ளி போன சர்தார் படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளது. 

நடிகர் கார்த்திக்கும் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்தது வருகிறார். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகியுள்ள இந்த படம் சூர்யாவின்  2டி நிறுவன தயாரிப்பில் உருவாகிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை வடிவம் கொடுத்து வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி வக்கீல் திரையனும் என எதிர்பார்க்கப்படும் இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி இயக்குனர் சற்குணத்துடன் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிது.  சற்குணம் தற்போது அதர்வா கபடி வீரராக நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு பட்டத்து அரசன் என்னும் தலைப்பை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கார்த்தியை இயக்க சற்குணம் தயாராகி விட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இதற்கிடையே நடிகர் கார்த்தி 'சர்தார்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.  இருவேடத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.  கடந்த ஆண்டு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது.

.கடந்த 2020-ம் ஆண்டு பூஜையுடன் துவங்கிய கார்த்தியின் சர்தார்  படம் அப்போது போடப்பட்ட ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் பொன்னியின் செல்வன், விருமன் படத்தில் கார்த்தி செம பிஸியானார்.  இவ்வாறு பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக தள்ளி போன சர்தார் படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளது. 

ஆனால் மீண்டு பழையபடி பரவத்துவங்கிய கொரோனா தோற்றால் மீண்டும் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த முறையும் சர்தார் தள்ளிபோகுமோ என்கிற அச்சத்தில் படக்குழுவினர் உள்ளார்களாம்...

click me!