'கைதி’யான நடிகர் கார்த்தி – காரணம் இதுதான்!

By ezhil mozhiFirst Published Mar 2, 2019, 3:56 PM IST
Highlights

ரஜத் ரவிஷங்கரின் ‘தேவ்’ படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தி கால்ஷீட் டைரியில் ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் மற்றும் ‘ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் படம் என இரண்டு படங்கள் உள்ளது.
 

'கைதி’யான நடிகர் கார்த்தி – காரணம் இதுதான்!

ரஜத் ரவிஷங்கரின் ‘தேவ்’ படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தி கால்ஷீட் டைரியில் ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் மற்றும் ‘ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் படம் என இரண்டு படங்கள் உள்ளது.

இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் - விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிறது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இதில் ஹீரோயினே இல்லையாம். மேலும், மிக முக்கிய கதாபாத்திரத்தில் ‘அஞ்சாதே’ நரேன் நடிக்கிறாராம்.

கார்த்தியின் கேரியரில் 18-வது படமான இதற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். தற்போது, இந்த படத்துக்கு ‘கைதி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

click me!