கன்னட சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர், ஹுச்சா வெங்கட் இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் ஜோடி 2 , என்கிற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இதே நிகழ்ச்சியில், நடிகை ரட்சணா என்பவரும் நடுவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஹுச்சா வெங்கட் பல நாட்காளாக தன்னுடைய காதலை கூறி ரட்சணாவை தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த காதலை ரட்சணா ஏற்று கொள்ளாததால் தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக நடிகை ரட்சணாவிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு பினாயில் எடுத்து குதித்துள்ளார்.
இவர் பினோய்ல் குடித்துவிட்டு வாந்தி எடுப்பதை பார்த்த அவரது நண்பர்கள் அவரை மருத்துவமைக்கு கொண்டு சென்ருன்றுள்ளனர்.
மேலும் இது குறித்து, விளக்கம் அளித்துள்ள நடிகை ரட்சணா... அவர் தன்னுடன் நட்புடன் பழகியபோது நானும் அவருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற ஒற்றுக்கொண்டேன். பின் அவர் தன்னை காதலிப்பதாக கூறினார் ஆனால் அவருடைய காதலில் தனக்கு உடன் பாடு இல்லை என்று பல முறை கூறியும் தொடர்ந்து தன்னை டார்ச்சர் செய்து வந்தார்.
தற்போது அவர், இந்த முடிவெடுத்ததற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார். ஏற்கனவே தன் தோழி ரேஷ்மாவை திருமணம் செய்து பின் மூன்று வருடத்தில் வெங்கடேஷ் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.