பிரேம் ஜீ வெளியிட்ட 'இறுதி பக்கம்' முதல் சிங்கிள் வீடியோ உள்ளே !!

By Kanmani PFirst Published Nov 17, 2021, 7:29 PM IST
Highlights

இறுதி பக்கம் படத்திலிருந்தும் தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. இதை நடிகர் பிரேம் ஜீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறுதி பக்கம்'. இப்படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பிரவின் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்ருதா ஶ்ரீநிவாசன், ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் குறித்து பேசிய மனோ வெ.கண்ணதாசன் ; திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த 'இறுதிப் பக்கம்'. ஒரு கொலை நடந்து இருக்கும் . அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதுதான் வெளியே தெரியும் கேள்வி.ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மன நிலையில் அதைப் பார்ப்பார்கள். வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக 'இறுதிப் பக்கம் ' இருக்கும் " என கூறியிருந்தார்.

இந்த படத்திலிருந்தும் தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. இதை நடிகர் பிரேம் ஜீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் முதல் சிங்குளாக கனவில் கவிதை என்னும் பாடலுக்கான வரிகளை  இயக்குனர் மனோ வெ. கண்ணதாசன்  எழுதியுள்ளார். எம்.எஸ்.ஜோன்ஸ் இசையில் பிரியங்கா என்கே மற்றும் சையத் சுபஹான் ஆகியோர் பாடியுள்ளனர். 

 

click me!