கமலஹாசன் அழைத்தும்... வர முடியாது என கூறிய பிரபல நடிகர்...

First Published May 17, 2017, 1:08 PM IST
Highlights
kamalhassan issue


உலக நாயகன் கமல்ஹாசனுடன் ஒரு படத்திலாவது பணிபுரிய வேண்டும் என்று பல நட்சத்திரங்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு பிரபல நடிகர் கமலே போன் போட்டு அழைத்தும் வர முடியாது என்று கூறிவிட்டாராம். 

இவர் வேற யாரும் இல்லை...? சமீபத்தில் வெளியான 'பவர்பாண்டி' படைத்து மூலம், தன்னோட இமேஜை உயர்த்தியுள்ள ராஜ்கிரண்தான்.

தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். இதற்கு வர ராஜ் கிரண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் உலகநாயகன் கமலஹாசனே போன் போட்டு, நிகழ்ச்சிக்கு வருமாறு கூறியுள்ளார். இதற்கு ராஜ்கிரண் நாம் நட்பு ரீதியாக பல மணிநேரம் கூட பேசலாம், ஆனால் தனக்கு எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என கறாராக கூறிவிட்டாராம்.

ராஜ்கிரணின் இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கூட ராஜ்கிரண்  கோடி பணம் கொடுத்தாலும், மக்களை ஏமாற்றும் வகையில் எடுக்கும் விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!