
ஜிஎஸ்டி வரியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்ற வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரும் ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. இதில் சினிமாவுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியால் திரையரங்குகளில் டிக்கெட் விலை மிகக் கடுமையாக உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது.
இதனையடுத்து, ஜி.எஸ்.டி வரியால் சினிமா உலகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நடிகர் கமல் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், சினிமா மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் கமல் தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்ற வேண்டும் என்று டுவிட்டரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது அழுத்தம் இல்லை என்றும் துன்பத்தில் இருக்கும் பிராந்திய சினிமாவின் கோரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி வரியால் பிராந்திய மொழிப் படங்கள் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், பிராந்திய மொழிப் படங்களை காப்பற்ற ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.