சித்தம் கலங்குது சாமி...பொன்பரப்பியில் ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி...கமல், இளையராஜா எழுதிய பாடல்...

By Muthurama LingamFirst Published Apr 20, 2019, 12:55 PM IST
Highlights

பொன்பரப்பி வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ‘மருதநாயகம்’ படப்பாடல் வரிகளை வேதனையுடன் மேற்கோள் காட்டியுள்ளார்.

பொன்பரப்பி வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ‘மருதநாயகம்’ படப்பாடல் வரிகளை வேதனையுடன் மேற்கோள் காட்டியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர்  தொல்.திருமா வளவன்  பானை சின்னத்தில் போட்டி இட்ட அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில், நடு வீதியில் பானைகளை உடைத்து, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணியினர்  வன்முறை நடத்தினர்.இதற்கு எதிர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களையும் கொளுத்தினர்.

இந்த வன்முறைகளுக்கு பல அர்சியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மருதநாயகம்’ படத்தின் பாடலின் 4 வரிகளை வெளியிட்ட கமல் ...மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும்  அவமானம்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

கமலின் கனவுப்படமான  ‘மருதநாயகம்’ ‘97ல் பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்டு நிதிப் பற்றாக்குறையால் கிடப்பில் போடப்பட்டது. இப்படத்தை பிரிடிஷ் இளவரசி குயின் எலிஸபெத் துவக்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம். pic.twitter.com/VusUubw1GV

— Kamal Haasan (@ikamalhaasan)

click me!