
தமிழ் திரையுலக நடிகர்களில் சற்று வித்தியாசமாகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிக்கும் படங்களும் சற்று வித்யாசமானவைகளாகவே இருக்கும்.
இந்நிலையில் தமிழக மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து இவர் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து மக்களுடைய கருத்துக்களையும் தெரிந்து கொண்டு வருகிறார்.
மேலும் பலர் இவர் தினமும் என்ன ட்விட் செய்வார் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.அந்த விதத்தில் தற்போது
எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர்.நிரந்தரம் நம்நாடு' என்றும்
நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது. என்றும் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.