கமலுடனான 13 வருட வாழ்கையை முறித்துக்கொண்டது ஏன்... முதல் முறையாக கூறிய கௌதமி...!

Asianet News Tamil  
Published : Mar 18, 2018, 06:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
கமலுடனான 13 வருட வாழ்கையை முறித்துக்கொண்டது ஏன்... முதல் முறையாக கூறிய கௌதமி...!

சுருக்கம்

kamal gowthami separate life

கமல் - கௌதமி:

13 வருடங்களாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த நடிகை கௌதமி திடீர் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கமலிடம் இருந்து பிரியப்போவதாக அறிவித்தார். 

இவர் இந்த தகவலை வெளியிட்டதும் பலருக்கும் பலவிதமான கேள்விகளும், சந்தேகங்களும், எழுப்பிய நிலையில் இது குறித்து தற்போது கௌதமி ஊடகம் ஒன்றிற்க்கு பிரதேயக பேட்டி அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில்... 

கமலுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஏற்கனவே நான் விளக்கமாக தன்னுடைய பிளாக்கில் கொடுத்துள்ளேன் இருப்பினும் என்னை இந்த கேள்வி விடாமல் துரத்தி வருகிறது. 

நான் கமலை விட்டு பிரிய வேண்டும் என்று ஒரு நாள் இரவில் எடுக்கவில்லை. இரண்டு வருடம் யோசித்து தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். நங்கள் பிரிந்ததற்க்கு காரணங்கள் பல இருந்தாலும் அனைத்தையும் என்னால் வெளியில் சொல்ல முடியாது அது இருவருக்குமான தனிப்பட்ட விஷயம் என்று கௌதமி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த உலகில் விவாதம் செய்யவும் பேசவும் நிறைய விஷயங்கள் இருக்கும் போது அவற்றில் கவனம் செலுத்தாமல் நானே பெரிது படுத்தாத ஒரு சிறிய விஷயம் குறித்து ஏன் இவ்வளவு விவாதம் செய்யப்படுகிறது என்று தனக்கு புரியவில்லை என்றும் கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தளபதியின் தம்பிகள் பேசியது என்ன? அட்லீ, லோகேஷ், நெல்சன் ஸ்பீச் இதோ
விஜய் கண்முன்னே கைது செய்யப்பட்ட ரசிகர்... ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு