மூணு வருஷம் ஆகியும் ஜூலிக்கு இப்படி நிலைமையா? கல்லூரியில் காத்திருந்த அதிர்ச்சி...

Published : Sep 21, 2019, 12:01 PM ISTUpdated : Sep 21, 2019, 12:02 PM IST
மூணு வருஷம் ஆகியும் ஜூலிக்கு இப்படி நிலைமையா? கல்லூரியில் காத்திருந்த அதிர்ச்சி...

சுருக்கம்

கல்லூரி விழாவில் பங்கேற்று பேசிய ஜூலியை ஓவியா, ஓவியா என கத்திய ரசிகர்கள்...கடுப்பாகி கண்கலங்கியபடியே வெளியேறியுள்ளார் ஜூலி.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தில் நெருங்கியுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் பரபரப்பான பல சம்பவங்கள் அடைந்தது அதில், தமிழச்சி, ஜல்லிக்கட்டு நாயகி போன்ற ஆட்டங்களோடு பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற ஜூலி, ஓவியா விஷயத்தில் டபுள் கேம் ஆடியதால் அவரின் உண்மையான முகமும் வெளிப்பட்டது.  ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மக்களிடையே பிரபலமான ஜூலி, மொத்த போரையும் டேமேஜ் செய்துகொண்டுள்ளார்.

மக்கள் மத்தியில் ஓவியாவுக்கு எந்த ளவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்ததோ, அதற்கு நேர் மாறாக  மக்கள் எதிர்ப்பு  ஜூலிக்கு இருந்தது.  இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரி ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜூலி சென்றுள்ளார். அப்போது ஜூலி மேடையேறி பேச ஆரம்பிக்கும் போது, அங்கிருந்த ரசிகர்கள் ஓவியா வாழ்க, ஓவியா வாழ்க என்று பலத்த கோஷம் எழுப்பினர். அதற்கு நீங்க என்ன கத்தினாலும் எதுவும் நடக்கப் போறதில்லை என்று ஜூலி கூறினார். அடுத்ததாக நான் ஒன்றும் உங்களுக்கு சோறு போடவில்லை நீங்களும் எனக்கு சோறு போடவில்லை என்று கண்கலங்கிய படியே, மேடையிலிருந்து பாதியில் வெளியேறியுள்ளார். 

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!
லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....