ஜோதிகா சொன்ன வார்த்தையில் - அதிர்ச்சியில் உறைந்தார் விஜய்....!!!

Asianet News Tamil  
Published : Feb 06, 2017, 12:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
ஜோதிகா சொன்ன வார்த்தையில் - அதிர்ச்சியில் உறைந்தார் விஜய்....!!!

சுருக்கம்

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக 61வது படத்தில் இணைத்துள்ளார். இந்த படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல் அகராவால் என மூன்று நாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

மேலும் பல ரசிகர்கள்  விஜய்- ஜோதிகா நடிப்பில் வந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் என்பதால் இந்த படமும் மாஸ் ஹிட்டாகும் என இரட்டிப்பு சந்தோஷத்தில் இருந்தனர். 

இந்த படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடிக்கவும் ஜோதிகா சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், படத்தின்  முழுக்கதையையும் கேட்டு, தன்னுடைய கதாபாத்திரத்தின் உடைகள் வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்தையும் 2 மாதங்களில் முடித்துவிட்டார் ஜோதிகா.

இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே தான்  படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட விஜயும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

 தற்போது ஜோதிகாவிற்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம் படக்குழு மேலும் ஏன் ஜோதிகா இந்த படத்தை விட்டு விலகினார் என இது வரை எந்த ஒரு தகவலையுயம் கூறவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிவகார்த்திகேயன் படத்திற்குப் புதிய சிக்கல்! 'பராசக்தி' கதை என்னுடையது - உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் அதிரடி வழக்கு!
வரதட்சணை புகாரில் சிக்கிய பாண்டியன் குடும்பம்: மீனாவை மட்டும் பாக்கியம் விட்டு வைத்தது ஏன்? பின்னணியில் இருக்கும் 'மாஸ்டர் பிளான்'!