
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் மதுரை அவனியாபுரத்தில் திரைப்பட இயக்குநர் கௌதமன் தலைமையில் இளைஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இயக்குநர் கௌதமன் மற்றும போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி இழுத்துச் சென்று கைது செய்தனர்.இதைப்போல் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் ஆர்யா வந்த போது பீட்டா அமைப்புக்கு ஆதராவாக செயல்படுவதாக கூறி அவருக்கு எதிரான கோஷங்களை இளைஞர்கள் எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் இளைஞர்கள் அவரை முற்றுகையிட முயன்றால் போலீசார் நடிகர் ஆரியாவை அங்கிருந்து அவசரம் அவசரமாக வெளியேற்றினர்.மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.