மாநில அரசுக்கு துணை நிற்போம் எனும் மோடி ஜல்லிக்கட்டை நடத்தினால் சப்போர்ட் செய்வாரா? - கரு.பழனியப்பன் கேள்வி

 
Published : Jan 19, 2017, 03:11 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
மாநில அரசுக்கு  துணை நிற்போம் எனும்  மோடி ஜல்லிக்கட்டை நடத்தினால் சப்போர்ட் செய்வாரா? - கரு.பழனியப்பன் கேள்வி

சுருக்கம்

மாநில அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்பேன் என்று கூறும் பிரதமர் மோடி என்ன சொல்ல வருகிறார். அப்படியானால் மாநில அரசு ஜல்லிக்கட்டை நடத்தினால் அதற்கு மத்திய அரசு துணை நிற்குமா ? என இயக்குனர் கரு பழனியப்பன் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அவர் கூறியதாவது: 

இது மாதிரி விளக்கம் வருவது எதிர்ப்பார்த்த ஒன்று. மாநில அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்குமென்பதை எப்படி புரிந்து கொள்வது. மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்தினால் மத்திய அரசு ஆதர்வாக இருக்குமா? என்ன சொல்கிறார் புரியவில்லை. இது பந்தை மாநில அரசு பக்கம் தள்ளிவிடும் செயல்

இளைஞர்கள் போராட்டகளத்தில் அமைதியாக இருக்கிறார்கள் , இந்திய அரசியலில் எந்த கட்சி போராட்டம் நடத்தினாலும் மூன்று மணி நேரத்தில் வன்முறையில் வந்து முடிந்துவிடும். ஆனால் நான்கு நாட்களாக மாணவர்கள் அமிதியான போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இவர்கள் இருட்டில் தேள் கொட்டியது போல் அமைதியாக இருக்கிறார்கள்.

மத்திய அரசு மாநில அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்கும் என்கிறார்கள் , அப்ப நாளைக்கே ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு முடிவெடுத்தால் மத்திய அரசு துணை நிற்குமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!