
நடிகர் ஜெய் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் அஞ்சலி மற்றும் ஜெய் காதலை உறுதி படுத்துவது போல் அமைந்துள்ளது.
இதுவரை தங்களுடைய காதலை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் இருந்த ஜெய், அஞ்சலி முதல்முறையாக தங்களுடைய காதலை தோசை மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
நேற்று முன் தினம் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் தோசை ப்ரோமோஷன் என்ற வித்தியாசமான ப்ரோமோஷன்களால் பல பிரபலங்கள் தங்களது மனைவி, மற்றும்குழந்தைகளுக்கு தோசை சுட்டு கொடுத்து அசத்தினர்.
அந்த வகையில் நேற்று ஜெய் தனது வீட்டில் லிவிங் டு கெதரில் வசிக்கும் அஞ்சலிக்கு தோசை சுட்டுக்கொடுத்துள்ளார் . அதை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தங்களுக்கான உறவு எப்படி என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஜெய், அஞ்சலி மிக விரைவில் திருமணத்தில் இணையப்போவது உறுதி என்று தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.